ஜேர்மனியில் பல்பொருள் அங்காடியில், வாடிக்கையாளர்களை நெருங்கி நின்றால் எச்சரிக்கும் ரோபோ..!!
கொரோனா வைரஸ் அச்சத்தால் ஜேர்மனின் லிண்ட்லர் நகரிலுள்ள பல்பொருள் அங்காடியில், வாடிக்கையாளர்களை 5 முதல் 6 அடி வரை இடைவெளி விட்டு நிற்க சொல்லும் ரோபோ, அனைவரையும் கவர்ந்துள்ளது.
பெப்பர்ஸ் (Peppers) என்று அழைக்கப்படும் இந்த ரோபோ, சென்சார்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இடையில் உள்ள தூரத்தை கணக்கிட்டு, அவர்கள் நெருங்கி வரும் வேளையில், கனிவான குரலில் தள்ளி நிற்க சொல்லி, சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்துகிறது. கொரோனா நோய் தொற்றால் மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு, பெப்பர்ஸ் ரோபோவின் குரல், புத்துணர்ச்சி ஊட்டுவதாக தெரிவிக்கின்றனர்.