மீண்டும் பொள்ளாச்சியில் பரபரப்பு..! வீட்டை விபச்சார விடுதியாக பயன்படுத்திய தம்பதியினர்..!
கடந்தவருடம் தமிழ் நாடு மட்டும் இன்றி இந்தியாவையே பதற வைத்த செய்தி பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் விவகாரம் தான்..குற்றவாளிகள் தற்போது தண்டனை அனுபவித்து வரும் நிலையில் இன்னுமொரு கொடூர சம்பவம் பொள்ளாச்சி அருகில் அனுப்பர்பாளையம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் செல்வராஜ் என்பவர் அவரது மனைவியுடன் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளார். இங்கு அறிமுகம் இல்லாத வயதான ஆண்கள் உட்பட கல்லூரி இளைஞர்களும் வந்து சென்றுகொண்டிருந்துள்ளனர். குறித்த ஜோடிக்கு பெரிதாக வருமானம் ஏதும் இல்லாத போதும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததால் கிராம மக்களுக்கு சந்தேகம் வந்துள்ளது.
இது தொடர்பாக பொலீஸாருக்கு ஊர் மக்கள் அறிவித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட நெகமம் காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல்துறையினர் செல்வராஜின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.குறித்த வீட்டிற்குள் 6 இளம் பெண்கள் உட்பட ஆண்களும் தகாத உறவில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் செல்வராஜ் அவரது மனைவி மற்றும் வீட்டில் இருந்த அனைவரையும் கைது செய்து பொலீஸார் விசாரணை செய்ததில் செல்வராஜ் விபச்சார ப்ரோக்கர் என்றும் பணத்திற்காக கஷ்டப் படும் இளம் பெண்களை ஆசைக் காட்டி கூட்டி சென்று வீட்டில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. தற்போது கோவை மத்திய சிறையில் இருவரும் அடைக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..!!