இன்றைய ராசி பலன்! 25 .09.2019
புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.
25.09.2019 புரட்டாதி மாதம் 08 ஆம் நாள் புதன்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். ஏகாதசி முன் பகல் 10.03 வரை ஆயிலியம் பின் இரவு 4.15 வரையாகும். சுப நேரம் அதிகாலை 4.32 – 6.02 வரையாகும். எமகண்டம் காலை 7.32 – 9.02 வரையாகும். இராகுகாலம் மதியம் 12.02 – 1.32 வரையாகும். குளிகன் காலை 10.32 – 12.02 வரையாகும்.
மேஷ ராசி நேயர்களே: நீங்கள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதால்கள் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் தேவை. இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.
ரிஷப ராசி அன்பர்களே: நீங்கள் விடுத்த சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். புதிய வாகனம் வாங்குவீங்கள். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. திடீர் பயணத்தில் நன்மை உண்டாகும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.
மிதுன ராசி காரர்களே: உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்கு வீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். பழைய கடனை திருப்பி வட்டியோடு கொடுப்பீங்கள். இன்றைய நாள் அதிரடி மாற்றம் உண்டாகும் நாளாகும்.
கடக ராசி நேயர்களே: உங்கள் ராசியில் சந்திரன் நீடிப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். புதிய வீடு வாங்குவீங்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். தயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் அமோகமான நாளாகும்.
சிம்ம ராசி அன்பர்களே: தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை அதிகரிக்கும். மறைமுக விமர்சனங் களும், எதிர்காலம் பற்றிய பயமும் வந்து நீங்கும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவீர்கள். சகோதரர் வகையில் நல்ல ஒற்றுமை இருக்கும். வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்படும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீங்கள். இன்றைய நாள் இனிமையான நாளாகும்.
கன்னி ராசி காரர்களே: உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவர். உறவினர்களுடன் அடிக்கடி மனஸ்தாபங்கள் வந்து போகும். வெளிநாட்டு யோகம் ஏற்படும். புதிய சொத்து வாங்குவீங்கள். இன்றைய நாள் வெற்றி அடையும் நாளாகும்.
துலாராசி உறவுகளே: உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிக இலாபம் ஏற்படும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.
விருச்சிக ராசி நேயர்களே:. நீங்கள் நினைத்தது கடும் முயற்சியால் நினைவேறும். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மீக சிந்தனை அதிகரிக் கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மரியாதைக் கூடும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும். பழைய கடனை கொடுப்பீங்கள். இன்றைய நாள் மனசாட்சி படி செயல்படும் நாளாகும்.
தனுசு ராசி அன்பர்களே: உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில் லையே என்று ஆதங்கப்படுவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். முன் கோபத்தை குறைத்து வாழ்வில் முன்னேறும் வழியை யோசிப்பீங்கள். காதல் திருமணம் வெற்றியடையும். இன்றைய நாள் நம்பிக்கை துளிர் விடும் நாளாகும்.
மகர ராசி காரர்களே: திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிக இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரிகள் ஆதரிப்பர். சகோதர வகையில் நன்மை உண்டு. குடும்ப செல்வாக்கு வெகுவாக உயரும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். புது வீடு மாற்றம் ஏற்படும். இன்றைய நாள் நன்மை உண்டாகும் நாளாகும்.
கும்ப ராசி உறவுகளே: உங்கள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுக்கவும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்கவும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.
மீன ராசி நேயர்களே: உங்களின் நீண்ட நாள் பிரார்த் தனையை நிறைவேற்றும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். வியாபாரம் சூடு பிடிக்கும். புதிய வீடு வாங்குவீங்கள். வெளிநாட்டு யோகம் ஏற்படும். தாய்வழி உறவினர்கள் பண உதவி செய்வார்கள். இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.