பிரசவத்தின் போது நடிகை பூஜா ஸுஞ்சார் மரணம்..! தாயும் மற்றும் சேயின் மரணத்திற்கு காரணம் இது தானாம்..!!
பிரபல மராத்தி நடிகையான பூஜா ஸுஞ்சார் மரணமடைந்தது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. 25 வயதான பூஜா மராத்தி மொழி திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தவர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர் இரண்டு வருடத்திற்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சினிமாவில் இருந்து ஒதுங்கிய நடிகை கர்ப்பமாக இருந்துள்ளார். நேற்றைய தினம் இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உடனடியாக வைத்தியசாலை அழைத்துச் சென்றுள்ளனர். கோரேகானில் உள்ள மருத்துவ மனையில் அனுமதித்த போது பிரசவத்தில் குழந்தை இறந்துள்ளது.
அதிக இரத்தப் போக்கில் பூஜாவின் உடல் நிலை மோசமடைய தொடங்கியது, உடனடியாக ஹிங்கோலி சிவில் ஹல்த் சென் டருக்கு அழைத்துச் செல்லும் படி வைத்தியர்கள் கூறியுள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு அறிவிக்கப் பட்டது, ஆனால் ஒரு மணி நேரமாக ஆம்புலன்ஸ் வரவில்லை.
பல முறை முயற்சியின் பின் ஆம்புலன்ஸ் வந்தது ஆனால் சிறிது தூரம் சென்ற போதே பூஜாவின் உயிர் பிரிந்துவிட்டது. ஒரு மணி நேரமாக பூஜா உயிருக்கு போராடியதை கண்ணால் பார்த்த உறவினர்கள் ஆம்புலன்ஸ் வர தாமதமானதாலேயே பூஜாவின் மரணம் நிகழ்ந்துள்ளது என தெரிவித்துள்ளனர். இந்த மரணம் மராத்தி திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..!!