கோத்தபாய ராஜபக்சவிற்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!! மகிழ்ச்சியில் ராஜபக்ச குடும்பத்தினர்கள் ..!
இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இன்று தள்ளுபடி செய்துள்ளது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில், அவரது மகள் அஹிம்சா விக்ரமதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு கோத்தபாய ராஜபக்ச பொறுப்புக் கூற வேண்டும் என்றும் தனக்கு நட்ட ஈடு பெற்றுத் தருமாறு கோரியும் அஹிம்சா விக்ரமதுங்க வழக்கு தாக்கல் செய்திருந்தார். கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே குறித்த வழக்கை தள்ளுபடி செய்வதாக கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமெரிக்க குடியுரிமையை பெற்றிருந்த கோத்தபாய ராஜபக்சவுக்கு இந்த வழக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னர் கூறப்பட்டிருந்தது.