பிக் பாஸ் நடிகையை அடித்ததுடன் மகளையும் மோசமாக துன்புறுத்திய கணவர்.! நடிகை பொலீஸில் பரபரப்பு புகார்..!!
குடித்துவிட்டு வந்து கணவர் தன்னையும் தன் குழந்தையையும் அடித்து துன்புறுத்துவதாக ஹிந்து பிக் பாஸ் சீசன் 4 வெற்றியாளரான நடிகை ஸ்வேதா திவாரி சம்தா நகர் பொலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்துள்ளார். ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் நடிகை ஸ்வேதா.
!Advert!
திரைப்படங்கள் உட்பட சீரியல்களில் நடித்து மக்களின் ஆதரவை பெற்றிருந்த ஸ்வேதாவிற்கு இலங்கை உட்பட பல நாடுகளில் ரசிகர்கள் இருந்தனர். இலங்கை மக்களை பொறுத்த வரை ஸ்வேதாவின் பெயர் பிரவீனாவாக இருந்தது. அந்த அளவிற்கு மக்களின் மனதில் ஸ்வேதாவின் பிரவீணா சீரியல் இடம்பிடித்திருந்தது.
இந்த நிலையில் 2013ம் ஆண்டு ஸ்வேதா அபிநவ் கோஹ்ழி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ள நிலையில் அபிநவ் மது போதைக்கு அடிமையாகி உள்ளார். இதனால் இருவருக்குமிடையில் அடிக்கடி சண்டை வந்துள்ளது.
!Advert!
இந்த நிலையில் அபிநவ் குடித்துவிட்டு வந்து மகளை துன்புறுத்துவதாகவும் இதனால் குழந்தைக்கு பயத்தால் உடல் நலக்குறைவு ஏற்படுவதாக கண்டிவாலி சம்தா நகர் பொலீஸில் புகார் அளித்துள்ளார். இதன் பின் பொலீஸார் நடத்திய விசாரணையில் இருவரும் பிரிந்து வாழ போவதாக கூறியுள்ளனர்…!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.