நாட்டுக்காக போரடிய மாவீரரின் தாய் மண்டியிட்ட கொடுமையான தருணம்.! புலம்பெயர் உறவுகள் தயவு செய்து வீடியோவை பாருங்கள்..!!
தாய் எம்மை தாயக மண்ணில் பெற்றுவிட்டார், ஈழத்தாய் தன் மடியில் எம்மை சுமந்து வளர்த்துவிட்டாள். பெற்ற தாயின் கடமையை ஓரளவு சரியாக செய்த நாம் எம்மை வளர்த்த ஈழத்தாய் துடித்துக் கொண்டிருக்கும் போது எங்கோ ஒர் இடத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.
!Advert!
ஆனால் பெற்றவளை விட வளர்த்தவளை சிலர் நேசித்தார்கள் அவர்களை நாம் போராளிகள், மாவீரர்கள், என்றழைத்தோம். இறுதிவரை மண்ணிற்காக வாழ்ந்தவர்கள் தனக்காக எதையும் சேமிக்கவில்லை, தன் தாய் பற்றியும் யோசிக்கவில்லை. அவர் என்ன எங்களை போல் சுயநல வாதிகளா.?
சுய நலமாய் வாழ்ந்த நாம் சுகமாக இருக்க, எமக்காக பொது நலமாய் வாழ்ந்த அவர்கள் மண்ணுக்குள் புதையுண்டு போனார்கள். அவர்களையே நம்பி வாழ்ந்த அவர்களது குடும்பங்கள் யாருமற்ற அனாதைகளாக அழுது வடிக்கின்றனர்.
!Advert!
ஐபிசி தமிழ் தொலைகாட்சி உறவுப் பாலம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் பேசிய தாய் ஒருவரின் கண்ணீரை பார்த்தபின் எங்கள் கண்களும் கலங்குகிறது. 1990 ம் ஆண்டு காணாமல் போனோர் பட்டியலில் கணவன் சேர்ந்துவிட கஷ்டத்தில் குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார்.
வீட்டுக்கு ஒரு மகளை நாட்டுக்கு கொடுத்தார். 2009ம் ஆண்டு மகள் வீரமரணம் அடைந்த பின் தனித்துவிடப் பட்ட தாய் இன்று அறிவிப்பாளரின் காலில் விழுந்த நொடி எங்கள் ஒவ்வொருவருக்குமான செருப்படி.!!
!Advert!