பாலைவனத்தில் மாட்டிக் கொண்டிருந்த ப்ரித்வி ராஜ் போட்ட பதிவு..! நலமுடன் மீண்டு வரும்படி ரசிகர்கள் வேண்டுகோள்..!
ஊரடங்கு சட்டம் காரணமாக பலர் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் பிரபல நடிகரான ப்ரித்வி ராஜ் வெளிநாடு ஒன்றிற்கு சூட்டிங்கிற்காக சென்று மாட்டிக் கொண்டார். படக் குழுவினருடன் பாலை வனத்தில் மாட்டிக் கொண்ட பிரித்வி அங்கு உணவுக்கு கஷ்டப் படுவதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனை பார்த்த அவரது உறவினர்கள் ரசிகர்கள் என பதறி போய் இருந்தனர். இதனால் யாராவது உதவுங்கள் என ப்ரித்வி ராஜின் மனைவி சுப்ரியா மேனன் இணையத்தில் பதிவிட்டிருந்தார். இந்தியாவில் இருந்து தனி விமானம் அனுப்ப பலரும் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நடிகர் ப்ரித்வி ராஜ் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் பேக் அப் செய்துவிட்டோம், சீக்கிரம் வந்து விடுவோம் எனபதிவிட்டுள்ளார். இதன் படி பார்த்தால் விமனா ஏற்பாடுகள் சரியாகி உள்ளது போல் தெரிகிறது. இந்த பதிவை பார்த்த ப்ரித்வி ரசிகர்கள் நலமுடன் இந்தியா வாருங்கள் என கொமெண்ட் செய்து வருகின்றனர்..!!