முன்னாள் கணவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இணைந்த நடிகை பிரியா ராமன்.! வைரலாகும் ஜோடியின் நெருக்கமான புகைப்படம்.!!
தற்போது பிரபல தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பிரியா ராமன். 80 மற்றும் 90களில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்த பிரியா ராமன் நடிகை ரஞ்சித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன் பின் 2014ம் ஆண்டு ரஞ்சித் நடிகை ராகசுதாவை திருமணம் செய்துகொண்டார். இவர் பிரபல நடிகை கே ஆர் விஜயாவின் அக்காவான நடிகை சாவிதிரியின் மகள்.
ராகசுதா ரஞ்சித் வாழ்க்கை ஒரு வருடம் கூட தொடரவில்லை, இருவரும் 11 மாதங்களில் விவாகரத்து செய்துகொண்டனர். பிரியா ராமன் தன் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் ரஞ்சித் தனிமையில் வாழ்ந்து வந்தார்.
பின் சீரியல் ஒன்றின் மூலம் இணைந்த இவர்கள் தற்போது மீண்டும் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் இந்த ஜோடி அடிக்கடி அவுட்டிங் சென்று வருகின்றனர். அண்மையில் இருவரும் வெளியே சென்ற போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.!!