காணாமல் போனதாக கூறப்படும் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி என்ன ஆனார்.? எங்கு சென்றார்..! முரணான பதில் சொல்லும் தாய் தந்தை..!
நேற்றைய தினம் நாட்டுப்புற பாடகர் புஷ்வனம் குப்புசாமி அவர்களின் மகள் பல்லவியை காணவில்லை என்ற தகவல் தீயாக பரவியது. இதனை தொடர்ந்து பல்லவியின் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ” அபியூசர்” என குறிப்பிட்டு தொலைபேசி இலக்கம் ஒன்று குறிப்பிடப் பட்டிருந்தது.
இது தொடர்பாக அனைவரும் தேடிக் கொண்டிருந்த நிலையில் ஏற்கனவே பல்லவியின் இன்ஸ்ட்டாகிராம் பகுதியில் இருந்த “அபியூசர்” என்ற பதிவு நீக்கப் பட்டதுடன் ” நான் பாதுகாப்பாக இருக்கிறேன், எனக்கும் ஒன்றும் ஆகவில்லை. ஆகவே கவலை படாதீர்கள் என பல்லவி பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தாய் அனிதா குப்பு சாமியிடம் இது பற்றி கேட்ட போது..
பல்லவி காணாமல் போகவில்லை. பொலீஸ் புகார் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.. அவள் ” நீட் கோட்சிங்” போய் இருக்கிறாள். வேறு ஏதும் பிரச்சனை இல்லை என தெரிவித்தார். அதே நேரம் தந்தை புஷ்வனம் குப்புசாமி அவர்களிடம் கேட்ட போது பல்லவி அவ தோழி வீட்டுக்கு போயிருக்கா..
அங்க வைச்சி அவ மொபைல் தண்ணீரில் விழுந்திடிச்சாம். அவ போன் ஆப் ஆனதால அவங்க அம்மா ரொம்ப பயந்து பொயிட்டாங்க. அது தான் இவ்வளவுக்கும் காரணம் வேற ஒன்னும் இல்ல.. இப்ப வந்துடுவேன்னு சொன்னா வந்துடுவா என கூறினார்.
கணவன் மனைவி இருவரும் வேறு வேறு முரணான விடயங்களை கூறி இருந்தாலும் பல்லவி பாதுகாப்பாக இருக்கிறேன் என கூறியுள்ளது மகிழ்ச்சி என்கின்றனர் ரசிகர்கள்…!!