ராதிகா கதாபாத்திரத்தை இப்படி மாற்றப் போகிறார்கள், இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பம் இல்லை, அதனால் தான் பாக்கியலக்ஷ்மி சீரியலில் இருந்து விலகினேன், உண்மையை வெளியிட்ட ஜெனிபர்.!
பாக்கிலக்ஷ்மி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிபர். சீரியல் நாயகி பாக்கியலக்ஷ்மியின் கணவராக நடிக்கும் கோபியின் முன்னாள் காதலியாகவும், தற்போது தோழியாகவும் இவரது கதாபாத்திரம் அமைந்திருந்தது, இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது,
ஜெனிபர் ஏற்கனவே திரைப்படங்கள் சீரியல்கள் நடித்தவர், அதனால் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்து இருந்தது, இந்த நிலையில் கடந்த வாரம் சீரியலில் இருந்து திடீரென ஜெனிபர் விலகினார், ஜெனிபருக்கு பதில் ரேஷ்மா ரதிகா கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். ஹிட் சீரியலாக செல்லும் பாக்கியலக்ஷ்மி சீரியலில் இருந்து ஏன் ஜெனிபர் விலகினார் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்த நிலையில் இன்று ஜெனிபர் இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அதில் எனக்கும் சீரியல் டீமுக்கும் எந்த சண்டையும் இல்லை, அவர்கள் என்னை விலக்கவும் இல்லை, நானாகவே விலகினேன், இனி வரும் நட்களில் ராதிகாவின் கதாபாத்திரம் வில்லியாக மாறவுள்ளது, என்னை ரசிகர்கள் வில்லியாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அத்துடன் வில்லியாக நடித்தால் இனி வரும் சீரியல்களில் வில்லியாகவே மாற்றி விடுவார்கள், வில்லியாக நடிக்க விருப்பம் இல்லை, அதனால் தான் பாக்கியலக்ஷ்மி சீரியலில் இருந்து விலகினேன் என தெரிவித்துள்ளார்!