இயக்குனர் ராஜமெளலியின் பிரமாண்ட படத்தில் நடிகை சாய் பல்லவி .!
பாகுபலி எனும் மிகப்பிரமாண்டமான மாபெரும் வெற்றிப் படத்தினை கொடுத்த இராஜமௌலி அடுத்து ஆர்.ஆர்.ஆர் எனும் படத்தினை இயக்கிவருகின்றார்.
மீண்டும் ஒரு வரலாற்று கதையை தேர்ந்தெடுத்திருக்கும் இராஜமௌலி இம்முறை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடிய அல்லுரி சீதாராம ராஜு, கொமரம் பாபு ஆகியோரின் கதையை படமாக்க 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கி வருகிறார்.
ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, பிரியாமணி உள்ளிட்ட பல முன்னணி பிரபல நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர்.
பிரிட்டிஷ் அரஅரசு சம்பந்தப்பட்ட கதை என்பதால் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக இங்கிலாந்தை சேர்ந்த டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் என்ற நடிகையை நடிக்க வைத்தார். பெருமளவான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் படத்தில் இருந்து விலகியுள்ளார்.
இவரின் இடத்தினை நிரப்புவதற்கு பல நடிகைகளின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்ட நிலையில் நடிகை சாய் பல்லவியினை தேர்வு செய்துள்ளார்கள். இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.