அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் நடிகர் ரஜினி காந்த் அவர்களை பார்க்க அனுமதி இல்லை.!! என்னானது.? பதற்றத்தில் ரசிகர்கள் இதோ விபரம்.!!
ரஜினிகாந்த் அவர்கள் இன்றைய தினம் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப் பட்டதை தொடர்ந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் அண்ணாத்த திரைப்பட சூட்டிங் நடைபெற்று வந்தது, இதன் போது சூட்டிங்கில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து PCR பரிசோதனை செய்யப் பட்டது,
இதில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப் பட்டதால் உடனடியாக படபிடிப்பு நிறுத்தப் பட்டது. இதனை தொடர்ந்து ரஜினி காந்த் அவர்களுக்கு PCR பரிசோதனை நடத்தப் பட்டது, அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப் பட்டதன் பின் ஹைதராபாத்தில் ரஜினிகாந்த் தங்கியிருந்த போது திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இது கொரோனா பாதித்தினால் இல்லை என்பது உறுதிபடுத்தப் பட்ட நிலையில், இரத்த ஓட்டம் சீராக இல்லை அதனை சரி செய்யவே வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் சற்று முன்னர் ரஜினி காந்த் அவர்களின் இரத்த ஓட்டம் சீராக இல்லை என்றும், அதற்கான சிகிச்சை இடம்பெற்று வருவதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது. தற்போது ரஜினி காந்த் ஓய்வில் இருக்கிறார் என்றும், அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்றும் கூறப் படுகின்றது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் பதற்றத்தில் உள்ளனர்.!!