நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது காமெடி நடிகர் சூரி பரபரப்பு புகார்.! காரணம் இது தான்..!!
வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பராட்டா காமெடி மூல ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் சூரி. இந்த திரைப்பட வெற்றியின் பின் சூரிக்கு வாய்ப்புகள் குவிந்த நிலையில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக சூரி இருக்கிறார். மற்றைய காமெடி நடிகர்களை விட சூரி ஆடம்பரம் இல்லாமல் இருப்பதால் அவரை அனைவரும் நேசிக்கின்றனர்.
இந்த நிலையில் பிரபல நடிகரான நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை முன்னாள் தீயணைப்புத்துறை டி.ஜி.பி ரமேஷ் குடவாலா மீது சூரி பரபரப்பு புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் 2015ம் ஆண்டு வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்த போது 40 லட்சம் ரூபா ரமேஷ் மிகுதி தர இருந்த நிலையில் 5 வருடங்கள் கடந்தும் இன்னும் கொடுக்கவில்லை.
அத்துடன் சினிமாவிற்கு வந்ததில் இருந்து வீடு வாங்க வேண்டும் என்று ஆசைபட்டேன், அதன் காரணமாக ரமேஷ், மற்றும் அன்பு வேல் ராஜா இருவரும் இடம் வாங்கி தருவதாக 2 கோடி 70 லட்சம் வாங்கினார்கள். ஆனால் இது வரை தரவில்லை.
பணம் கொடுத்ததற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது தயவு செய்து என் பணத்தை வாங்கி தாருங்கள் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரையும் ஆதாரங்களையும் அடிப்படையாக வைத்து இருவர் மீதும் பொலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்..!