மீண்டும் ஏமாற்றம் அடைந்த ஆரி ரசிகர்கள்.! கடுப்பில் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வரும் விடயம். ஆரி ரசிகர்களின் கெத்து.!!
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ரம்யா பாண்டியன் வெளியேற்றப் படுவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது. பிக் பாஸ் வரலாற்றில் முதல் முதலாக இம்முறை பைனல் வாரத்திற்குள் 6 போட்டியாளர்கள் செல்கின்றனர். இதில் இருந்து ஒருவர் பணத்துடன் செல்ல மற்ற 5 பேர் பைனலில் இருப்பார்கள் என்று கூறப்படுகின்றது.
நாளைய தினம் டபுள் எவிக்சன் இருக்கும் என் மக்கள் நினைக்க இல்லை ஒரே ஒரு எவிக்ஷன் தான் என கமலஹாசன் கூறினார். இதனால் ரம்யா பாண்டியன் வெளியேற்றப் பட போகிறார் என காத்திருந்தவர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் காத்திருக்கின்றது, ரம்யா பாண்டியன் ரசிகர்களால் காப்பாற்றப் படுகிறார், இம்முறை ஷிவானி வெளியேறுகிறார்..
ஆரி விடயத்தில் ரம்யா பாண்டியன் முகத்தில் அடித்தது போல் பேசுவதால் ஆரி ரசிகர்கள் ரம்யாவை வெளியேற்ற மிகவும் போராடி வந்தார்கள். ரம்யாவை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சோம் சேகருக்கு வாக்களித்தனர்..ஆனால் சோம் சேகர் டிக்கெட் 2 பினாலே வெற்றி பெற்றுவிட்டார். இதனால் மிகவும் சோகத்தில் உள்ளனர்.
ரம்யா பைனல் செல்ல கூடாது என நினைத்திருந்தவர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாகும். இதனால் டுவிட்டர் பக்கத்தில் ரம்யா பாண்டியனே வெளியேறு என்ற ஹாஷ்டேக்கை டுவிட்டர் பக்கத்தில் வைரலாக்கி வருகின்றனர்.!!