பிக் பாஸ் வீட்டில் சோம் சேகரை மச்சான் என கூப்பிட்ட ரம்யாவின் தம்பி காரணம் இது தானாம், அத்துடன் டைட்டில் வின்னர் இந்த போட்டியாளர் தானாம். ரம்யா தம்பி பரசு பேட்டி.!!
பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் ப்றீஸ் டாஸ்க் இடம்பெற்றது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து சென்றனர். பாலாஜியின் அண்ணா, ஷிவானியின் அம்மா, ஆரியின் மனைவி மற்றும் குழந்தை, ரியோவின் மனைவி, சோமின் தம்பி, கேப்ரியலாவின் அம்மா, ஆஜித்தின் அம்மா, ரம்யாவின் அம்மா மற்றும் தம்பி என அனைவரும் வந்து சென்றனர்.
இதனால் வீடு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இவர்கள் வந்து சென்றதால் தான் பிரச்சனையே ஆரம்பமானது. ஆரியும் பாலாவும் மறுபடி மோதிக்கொண்டனர். இந்த நிலையில் ரம்யாவின் தம்பி பரசு பிரபல மீடியா ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ரம்யா வீட்டில் சிறப்பாக விளையாடி வருகிறாள், அவளிடம் எந்த தவறும் இல்லை குறையும் இல்லை.
பாலாஜி திறமையானவர் அவரது கோபம் தான் அவரின் பலம் பலவீனம் இரண்டும். ஆரியை நல்ல நடிகராக எனக்கு பிடிக்கும். அவர் நிறைய நல்ல விடயங்களை மக்களுக்காக செய்து இருக்கின்றார். கண்டிப்பாக டைட்டிலை அவர் தான் வெற்றிபெறுவார் என தெரிவித்தார்.
இதன் போது தொகுப்பாளர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதுமே சோம் சேகரை மச்சான் என்று கூப்பிட்டீர்களே ஏன் என்று கேட்டதற்கு சோம் சேகரை என்னமோ பிடித்திருக்கிறது. பிக் பாஸ் போட்டியாளராக இல்லாமல் சக நண்பராக பார்க்க தோன்றுகிறது. அத்துடன் கிண்டலாகவும் தான் மச்சான் என்றேன். நிஜத்தில் சோம் சேகரின் அப்பாவி தனம் மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.!