‘நீ யார் என்பதை பிக் பாஸ் வீட்டிற்குள் காட்டிவிட்டாய்.! இப்போது கெத்தாக வெளியே வா” ரம்யா பாண்டியனின் தம்பி பரசு அதிரடி பதிவு..! ஏன் தெரியுமா நீங்களே பாருங்கள்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ஆண்களுக்கு நிகராக விளையாடுகிறார், நிச்சயம் பைனலில் வெற்றி பெறுவார் என ரசிகர்களால் கொண்டாடப் பட்டவர் நடிகை ரம்யா பாண்டியன். டாஸ்க், சமையல் என எந்த வேலையாக இருந்தாலும் சிறப்பாக செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். போட்டியாளர்கள் ரம்யா தான் வெற்றியாளர் என முடிவு எடுத்திருந்த நிலையில் ஆரியை நேர் எதிர் எதிர்க்க தொடங்கினார் ரம்யா பாண்டியன்.
ஆரி செய்யும் தவறுகளை உடனுக்குடன் தட்டிக் கேட்டார். இதை விட ஆரி பற்றி பின்னால் பேசிக்கொண்டே இருந்தார். இதனால் கடுப்பான ஆரி ரசிகர்கள் ரம்யா பாண்டியனுக்கு நரி பாண்டியன் என பெயரும் வைத்தனர். இது ஒரு பக்கம் இருக்க பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ரம்யாவின் தம்பி பரசு நீ சிறப்பாக விளையாடுகிறாய்,
இந்த வாரம் நீ வெளியேறினால் கூட கவலை படாதே நீ சிறப்பாக விளையாடிவிட்டு தான் வெளியேறுவாய், உன் தவறு சிறிதும் இல்லை என கூறிச் சென்றார். எது எப்படி நடந்தாலும் ரம்யா ரம்யாவாகவே இருந்தார். டிக்கெட் 2 பினாலே டாஸ்கில் கயிறு டாஸ்க் வந்த போது ரம்யாவும் சிவானியும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் விளையாடினார்கள்.
இதில் ஷிவானி வெற்றிபெற்றார் இதனை பார்த்துக் கொண்டிருந்த ரம்யாவின் தம்பி பரசு இது போதும் நீ வெற்றி பெற்று விட்டாய். டைட்டில் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நீ யார் என்பதை நிரூபித்து விட்டாய், இதே தைரியத்துடன் வா நீ நிஜத்தில் சிங்கப் பெண் தான் என கூறியுள்ளார்.!!