நடிகை ரம்யா பாண்டியன் திடீரென வைத்தியசாலையில் அனுமதி.!! நலம்பெற பிரார்த்திக்குமாறு குடும்பத்தினர் வேண்டுகோள்.!!
தொகுப்பாளினி பிரியங்காவை தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக ரம்யா பாண்டியனின் தங்கை கீர்த்தி பாண்டியன் தெரிவித்துள்ளார். ஆண் தேவதை, ஜோக்கர், திரைப்படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியன் இடுப்பு அழகியாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் இருந்தார்.
குக் வித் கோமாளி சீசன் 1ல் ரசிகர்கள் இவரை கொண்டாடினார்கள். ஆனால் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு ரம்யா செய்த சில செயல்கள் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போக ரம்யா பாண்டியனை விஷம், நரி என திட்டி தீர்த்தனர். இவற்றை கண்டுகொள்ளாத ரம்யா பண்டியன் தனது வேலையில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் தொலைகாட்சியில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ள நிலையில் ரம்யா பாண்டியன் இதில் கலந்துகொள்ளவில்லை. ஏன் இவர் வரவில்லை என தேடிய போது ரம்யா பண்டியனின் தங்கை கீர்த்தி சுரேஷ் போட்ட பதிவு ரசிகர்களை ஷக்காக்கி உள்ளது. அதில் “ரம்யா பாண்டியன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
அவரது கண்ணில் ஏற்பட்டுள்ள நோய் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது” ரசிகர்கள் அவர் நலம் பெற பிரார்த்தியுங்கள் என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அட ஆண்டவா என சோகத்தில் உள்ளனர்.!!