பிக் பாஸ் நிகழ்ச்சியால் என் இவற்றை எல்லாம் இழந்துவிட்டேன், நடிகை ரம்யா பாட்டியன் பேட்டி.! உண்மையாக இருந்தால் இது தான் கிடைக்குமாம்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சியினால் தனது வாழ்க்கையில் பலவற்றை இழந்துவிட்டதாக நடிகை ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் ஆரம்பத்தில் ரசிகர்களால் கொண்டாடப் பட்டாலும் பின்னர் ஆரியை பற்றி பேசுவதால் ரம்யா மீது கடுப்பானார்கள்.
இதனால் ரம்பா பாண்டியனை மிகவும் கேவலமாக விமர்சிக்கத் தொடங்கினார்கள். இதனை தொடர்ந்து ரம்யா பாண்டியனுக்கு இருந்த ரசிகர் பட்டாளம் திடீரென குறைந்தது. ஏற்கனவே போட்டோ ஷூட் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கொண்டாடிய ரசிகர்கள் திட்டி தீர்த்தனர்.
சமூக வலைத்தளத்தில் இருந்த followers திடீரென குறைந்தனர். பிக் பாஸ் வீட்டில் இறுதி வரை போராடிய ரம்யா பாண்டியன் பைனல் வரை வந்ததுடன் 4ம் இடத்தை பிடித்தார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் அண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கூறியதுடன் அதனால் தான் இழந்தவை பற்றியும் கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு இருந்த நல்ல நண்பர்கள் உட்பட வாய்ப்புகளையும் இழந்துவிட்டேன், வீட்டில் உண்மையாக இருக்காமல் கேமரா முன்பு நடித்தால் வெற்றி பெறலாம் என கூறியதுடன் வீட்டில் உண்மையாக இருந்ததால் பலவற்றை இழந்துவிட்டேன் என கூறியுள்ளார்.!