தயவு செய்து இதனை நீக்கி விடுங்கள், பொலீஸில் பரபரப்பு புகார் கொடுத்த பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அபிஷேக்கின் முன்னாள் மனைவி தீபா.! வைரலாகும் பதிவு.!!
தயவு செய்து இந்த வீடியோவை டிலிட் செய்யுங்கள் என பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அபிஷேக் ராஜனின் மனைவி தீபா பொலீஸில் புகார் அளித்துள்ளாக அவரே தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள நானும் அபிஷேக்கும் காதலித்தே திருமணம் செய்துகொண்டோம்.
காதலிக்கும் போது எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கனவுகள் ஆயிரம் இருந்தது, ஆனால் நொடியில் அவை உடைந்து போன போது அதிர்ந்து போனேன். இருவரும் பிரிவது தான் சரியான வழி என உணர்ந்து கொண்டு முடிந்த வரை வாழ முயற்சி செய்தேன் ஆனால் பொய்யான வாழ்க்கை மகிழ்ச்சியை தராது என்பதால் விவாகரத்து செய்தேன்.
இது எங்கள் இருவருக்கும் சரியாகவே பட்டது. ஆனால் தற்போது அபிஷேக் பெரிய நிகழ்ச்சி ஒன்றில் திருமண முறிவு பற்றி பேசிய போது பல காயங்கள் நினைவுக்கு வந்தது, என்ன தான் நாம் மறந்துவிட்டதாய் நினைத்தாலும் அவை மறக்க முடியாத வலிகள் என கூறி உள்ளதுடன்,
குறித்த நிகழ்சியில் அபிஷேக் கலந்து கொண்டுள்ளதால் அவரை ரசிகர்கள் யார் என்று தேடி பார்க்கிறார்கள்,இதன் போது திருமணம் முடித்து சில நாட்களில் நான் கொடுத்த பேட்டி ஒன்று ரசிகர்களின் கண்ணில் படுகிறது. இந்த பேட்டியில் நான் கூறிய விடயங்கள் தற்போது நேர் எதிராக நடக்கிறது, இதனை பார்க்கும் சிலர் அப்படி பேசிவிட்டு இப்படி பேசுகின்றீர்களே என கிண்டல் செய்கிறார்கள்.
அந்த பேட்டி தற்போது தேவையற்ற பேட்டியாகும் அதனால் தயவு செய்து குறித்த பேட்டியின் வீடியோவை தயவு செய்து டிலிட் செய்து விடுங்கள் என தெரிவித்துள்ளார்.! தற்போது இவரது பதிவு வைரலாகி வருகின்றது.!!