முகெனுக்கு ரெட் கார்ட் என்றால் அடுத்து லொஸ்லியா, தர்சன், வெளியேற்றமா.? கவனிப்பாரா கமலஹாசன்..!!
பிக் பாஸ் வீட்டில் தற்போதைய நிலை கொஞ்சம் பயங்கரமானதாக இருக்கிறது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக சண்டை மட்டுமே இருந்து வருகிறது. வனிதா வீட்டிற்குள் வந்தவுடன் சிலரை டார்கெட் செய்தார். அதில் முகென், தர்சன், லொஸ்லியா, இவர்கள் வெற்றிபெற கூடாது என்பது வனிதாவின் நோக்கமாக இருக்கிறது. வீட்டிற்குள் வந்ததும் அபிராமியை தூண்டிவிட்டு முகென் கோபப் படும்படி நடந்துகொண்டார்.
இதனால் முகெனின் கோபம் அளவு கடந்தது இம்முறை முகெனுக்கு கமலஹாசன் திட்டுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. சில நேரம் ரெட் கார்ட் கொடுக்கலாம் என பலர் கூறிவருகின்றனர். இப்படி இருக்க நேற்று சேரனுடன் சேர்ந்து வனிதா பேசுகிறார். அதில் தர்சன் பிரபலமானவர்களை குறி வைத்து சண்டையிடுகிறார்.
அவர் வெற்றி பெற்று விடுவார் என அதிகம் நம்புகிறார். அதனால் தான் இப்படி செய்கிறார். இவரது உண்மை முகத்தை கிழிக்கிறேன் என்கிறார். நேற்று எதுவும் இல்லாத பிரச்சனைக்கு மது தர்சனை டார்கெட் செய்தார். இவர்களை பொறுத்த வரை தர்சன் வெற்றி பெற கூடாது.
தமிழ் தமிழ் என பேசுகிறார்கள், ஆனால் தர்சன் தமிழன் தானே பின்பு ஏன் இந்த சர்ச்சை ஏன் வெளியேற்ற துடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இவர்களுக்கும் தாய் நாடு தமிழ் நாடு தான் என்பதை போட்டியாளர்கள் மறந்துவிட்டனர், எங்கோ இருந்து வந்தவர்கள் இந்த வார்த்தை அடிக்கடி வனிதாவின் வாயில் இருந்து வருகிறது. இம்முறை கமலஹாசன் இவற்றை கவனிப்பார் என நம்புகிறோம்..!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.
#Day53 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/uhEOnXaCEb
— Vijay Television (@vijaytelevision) August 15, 2019