காதலனின் பெயரை பச்சைக் குத்திக்கொண்ட ரேஷ்மா.! எந்த இடத்தில் தெரியுமா இதோ புகைப்படம்.!!
பிரபல தொலைக்காட்சியில் நடன்ச் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா. இந்த நிகழ்ச்சியின் பின் அதே தொலைக்காட்சியில் “பூவே பூச்சூடவா” என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்க ஹீரோயினாக நடிக்க தொடங்கினார்.
அதே சீரியலில் ரேஷ்மாவின் அக்காவின் கணவராக நடித்த தொகுப்பாளர் மதன் மீது காதல் ஏற்பட இருவரும் காதலித்து வந்தனர். இதனை ரசிகர்களுக்கு வெளிப்படையாக அறிவித்த இவர்கள் சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளப் போவதாக கூறி இருந்தார்கள். இரு வீட்டாரும் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் கூறிய நிலையில் ரேஷ்கா தனது கழுத்து பகுதியில் மதனின் பெயரை பச்சைக்குத்திக் கொண்டுள்ளார்.
பொதுவாக கையில் தான் காதலரின் பெயரை பச்சைக் குத்துவார்கள், ரேஷ்மா கழுத்துப் பகுதியில் குத்தியுள்ளார், இது பற்றி ரேஷ்மாவிடம் கேட்டதற்கு அழிக்கும் நிலை ஏற்படாது, அதனால் தான் கழுத்தில் குத்தினேன் என தெரிவித்துள்ளார்.!