நடிகை ரித்திகாவின் வீட்டிற்குள் திடீரென புகுந்த இளைஞர் செய்த செயல்..! சென்னையில் பரபரப்பு..!
பிரபல சீரியல் நடிகையின் வீட்டிற்கு சென்று அவரை திருமணம் செய்து வைக்கச் சொல்லி கலாட்டா செய்த சம்பவம் சென்னை வடபழநி சாலையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது. தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ராஜா ராணி உட்பட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்திகா.
நேற்றைய தினம் இவர் வெளியே சென்றிருந்த வேளை இளைஞர் ஒருவர் இவர்களின் வீட்டின் கதவை விடாமல் தட்டியுள்ளார். கதவை திறந்த நடிகை ரித்திகாவின் தந்தையிடம் ரித்திகாவை நான் காதலிக்கிறேன் அவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என கூறியுள்ளார்.
இதனை இதனை தொடர்ந்து ரித்திகாவின் தந்தை சுப்ரமணி குறித்த இளைஞருக்கு புரிய வைக்க முயற்சித்த போது வாக்குவாதமாகியுள்ளது. அங்கிருந்தவர்கள் பொலீஸுக்கு அறிவிக்க பொலீஸார் வந்து குறித்த இளைஞரை அழைத்துச் சென்றுள்ளனர்.
குறித்த இளைஞர் பெயர் பரத் என்றும் 23 வயதான இவர் இஞ்சினீயராக பணிபுரிகிறார் என்றும் தெரியவர பெற்றோரை அழைத்து பொலீஸார் விசாரித்த போது கோவா சொவதற்காக சென்னை எயார்போர்ட் வந்த பரத்திற்கு விமான மிஸ் ஆன நேரத்தில் நடிகை ரித்விகாவின் முகவரி கிடைத்துள்ளது இதனை தொடர்ந்து அங்கு சென்ற இளைஞர் ரித்திகாவை திருமணம் செய்து தர சொல்லி அடம்பிடித்துள்ளார்.
இது குறித்து பொலீஸாரிடம் தங்கள் மகனுக்கு மன அழுத்தம் அதிகமானால் இது போன்ற செயல்களை செய்கிறார் என கூறியதால் அத்துடன் ரித்திகாவின் தந்தையும் புகார் கொடுக்கவில்லை என்பதாலும் அறிவுரை வழங்கி பொலீஸார் கடிதமூலம் எழுதி வாங்கிவிட்டு விடுதலை செய்துள்ளனர்.!