இனி யாரேனும் முஸ்லீம் பெண்களின் “ஹிஜாப்”பை கழட்டச் சொன்னால் உடனடியாக இதனை செய்யுங்கள்..!
இலங்கையில் ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற கொடூர தற்கொலை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அவசரகால சட்டம் அமுல்படுத்தப் பட்டது. இதன் அடிப்படையில் பயங்கரவாதிகள் எந்த விதத்திலும் தாக்குதல் நடத்த முடியும் என்ற எச்சரிக்கையில் முஸ்லீம் பெண்களின் ஆடை விடயத்தில் கவனம் செலுத்தப் பட்டது.
இதனால் முகத்தோடு கண்கள் முழுவதையும் மறைக்கும் புர்காவிற்கும், முகத்தை முழுவதும் மறைக்கும் நிகாப்பிற்கும் தடை விதிக்கப் பட்டது. முஸ்லீம் சயம அலுவல்கள் அமைச்சின் அனுமதியுடனேயே இந்த செயல்பாடு ஆரம்பிக்கப் பட்டது. ஆனால் முகம் முழுவதும் திறந்த நிலையில் தலை மட்டும் மறைத்தலுக்கு தடை விதிக்கப் படவில்லை.
அண்மையில் சில இடங்களில் தலை மட்டும் மறைத்து சென்ற பெண்களிடம் சிலர் வன்முறையாக பேசி, நடந்துகொண்டதை தொடர்ந்து முஸ்லீம் அமைச்சு தகவல் ஒன்றை வெளிட்டுள்ளது. பெண்கள் முகம் முழுவதும் திறந்த நிலையில் தலை மறைத்திருந்தால் அதற்கு எதிராக யாரேனும் பேசினாலோ அல்லது ஹிஜாப், தலையில் போடும் துணி போன்றவற்றை கழட்ட கூறினாலோ..
உடனடியாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடும் படி கேட்டுக் கொண்டுள்ளனர். நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் முஸ்லீம் தீவிர வாதிகளால் மேற்கொள்ளப் பட்டதால் அரசின் சில நடவடிக்கைகளுக்கு கட்டுப் பட வேண்டிய அவசியம் முஸ்லீம் சமூகத்தினருக்கு இருகிறது இதனால் தான்
புர்கா மற்றும் நிகாப் தடை செய்யப் பட்டதற்கு முஸ்லீம்கள் ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில் தடை செய்யப் படாத விடயத்தை நீக்கச் சொன்னால் உடனடியாக பள்ளி வாசல்கள் ஊடாக அல்லது நேரடியாக மனித உரிமை குழுவிடம் முறையிடலாம்.
ஒருவருடைய கலாச்சாரத்தை எந்த நாட்டு அரசாலும் தடை செய்ய முடியாவிட்டாலும் அவசரகால சட்டம் மற்றும் தீவிரவாத எச்சரிக்கை காரணமாக தடை செய்ய முடியும். இதன் அடிப்படையிலேயே இலங்கையில் முஸ்லீம்களின் புர்கா மற்றும் நிகாப்பிற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது..!