மருத்துவர்களின் உதவியுடன் தன்னை தானே கொலை செய்த இந்திய வம்சாவளி பெண்.! கணவருக்கு கொடுத்த காதல் பரிசு இது தான்..!!
திடீரென ஏற்படுகின்ற மரணங்களை விட நாம் மரணிக்க போகிறோம் என தெரிந்து தினம் தினம் மரணிப்பது கொடுமை. அந்த கொடூரமான கொடுமையை அனுபவித்தவர் ஷெல்லிசர்வால். இந்தியாவை சேர்ந்த செல்லி ராண்டி ட்ரெசிடரை காதலித்து திருமணம் செய்து ஹாலிfபாக்சில் வசித்து வந்தார்.
இவருக்கு “Multiple system atrophy” என்ற கொடூர நோயின் தாக்கம் ஏற்பட்டது. இந்த நோயை குணப்படுத்த முடியாது என அத்தனை வைத்தியர்களும் கை விரித்தனர். கணவர் ராண்டி எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இதனால் ஷெல்லி தன்னை கருணை கொலை செய்ய சொல்லி வைத்தியர்களிடம் கூறினார். தனது மரணத்திற்கு முன்பு அத்தனை உடல் உறுப்புகளையும் தானம் செய்தார்.
2018ம் ஆண்டு 8ம் மாதம் 31 மருத்துவர்கள் ஷெல்லியை கருணைகொலை செய்தனர். மனைவியின் பிரிவு ராண்டியை வாட்டியது. மனைவியின் அறையில் ஒவ்வொன்றாக பார்த்து கண்ணீர் வடித்தவருக்கு பரிசு பார்சல் ஒன்று சிக்கியது.
திறந்து பார்த்த போது இசை தட்டு இருந்துள்ளது ப்லே செய்தவர் கதறி அழுதுள்ளார் காரணம் தனது காதல் மனைவியுடன் வாழ்ந்த நாட்கள் முழுவதையும் பாடலாக மேகன் என்பவர் செய்திருந்தார். அதில் இருந்த கடிதத்தில் என் கணவருக்கு மரணத்தில் பின்னான பரிசு இது. இசையமைப்பாளர் மேகனிடம் கணவருக்காக என இசையமைத்து வாங்கினேன் மகிழ்ச்சியாக இருங்கள் என குறிப்பிட்டுருந்தார்..!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.