16 வயது சிறுவனை அடைத்து வைத்து பாலியல் உறவு வைத்த 38 வயது பெண்..! இந்தியாவில் நடந்த கொடூரம்…!!
38 வயதான பெண் ஒருவர் 16 வயது சிறுவனை கட்டாய பாலியல் உறவில் ஈடுபாட்ட விடயம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மும்பை நேரு நகரை சேர்ந்தவர் சதீஷ் என்ற 16 வயது சிறுவன் ஒருவன் பெற்றோரிடம் ஹோட்டலுக்கு செல்வதாக கூறி கடந்த ஜூன் மாதம் 29ம் திகதி சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் காணவில்லை என்பதால் நேரு நகர் பொலீஸில் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.அதே நாளில் 38 வயது நான்கு பிள்ளைகளின் தாயை காணவில்லை என பொலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இரண்டையும் சந்தேகத்துடன் தேடிய பொலீஸார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
காரணம் குறித்த பெண் சிறுவனை டெல்லிக்கு அழைத்து சென்றதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தேடுதலை அதிகரித்த பொலீஸார் வதோதரா மற்றும் நவ்சாரி நகரங்களில் தம்பி என கூறி வீடு வாடகைக்கு கேட்டுள்ளார். ஆனால் அனைவருமே சந்தேகத்துடன் பார்த்ததால் வீடு கிடைக்கவில்லை.
அதன் பின் மும்பைக்கு சிறுவனுடன் வந்து குர்லா பகுதியில் வசித்து வந்துள்ளார்.பொலீஸாரின் முயற்சியால் சிறுவனை காப்பாற்றிய போது சிறுவன் பயந்துபோய் இருந்துள்ளான். இது தொடர்பாக சிறுவனிடம் கேட்டபோது முதலில் அன்பாக பேசி அழைத்துச் சென்றார் பின் என்னை அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை செய்தார். என்னை யாரையும் பார்க்க விடவில்லை.
அறைக்குள் அடைத்து வைத்து பாலியல் உறவு வைத்தார். என கூறியதை தொடர்ந்து பெண் மீது குழந்தை கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம், போக்சோ போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்…!