சாதி கொடுமையால் நீதி கேட்டு கதறும் 17 வயது மாணவி..!
இந்தியாவை பொறுத்த வரை சாதிகொடுமை என்பது சர்வ சாதாரணமான விடயம். ஆனால் இந்த சாதி பிரச்சனையால் பாதிக்கப் படுவது அப்பாவி குழந்தைகள் தான். இப்படி சாதி கொடுமையால் பாதிக்கப் பட்ட 17 வயது மாணவி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் சாதியை காரணம் காட்டி லதா என்ற மாணவியின் குடும்பத்தினரை கிராமத்தினர் ஒதுக்கி வைத்துள்ளனர். அதாவது கிராமத்தில் அவர்களுக்கு இருந்த இடமும் பறிக்கப்பட்டு கிராமத்தின் ஒதுக்கு புறத்தில் குடியேற்றி இருக்கின்றனர்.
கிராமத்தினரால் ஒதுக்கப்பட்ட இந்த குடும்பத்துடன் ஒருவர் கூட பேசுவதில்லை. இது தொடர்பாக பிரதமர் உட்பட பலருக்கு கடிதம் கொடுத்தும் தீர்வு இல்லை. பொலீஸில் புகார் கொடுத்தாலும் அவர்கள் புகாரை ஏற்கவில்லை.இதனால் மனமுடைந்த லதா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
உடனடியா வைத்தியசாலை எடுத்துசென்றதால் காப்பாற்றப்பட்டுள்ளார். தற்போது 24 மணி நேர வைத்திய கண்காணிப்பில் இருக்கும் லதா சாதியை காரணம் காட்டி தன்னுடன் யாரும் பேசுவதில்லை என்ற மன வருத்தத்தில் இந்த முடிவு எடுத்ததாக கூறியுள்ளார். இந்த சாதியில் அப்படி என்ன தான் இருக்கு? பலரது உயிரை குடிக்கும் இந்த சாதி தேவை தானா.?
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”