இந்த சிறு வயது பழக்கம் தான் சினிமாவில் என்னை காப்பாற்றுகிறது..! தன் மீதான சர்ச்சை பற்றி பேட்டி அளித்த சாய் பல்லவி..!
தியா திரைப்படத்தின் ஊடாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. தெலுங்கு கன்னடம் மலையாளம் என முன்னணி நாயகியாக இருந்தாலும் தமிழில் வரவேற்பு பெரிதாக இல்லை. இருப்பினும் வாய்ப்பு குறையவில்லை..தனுஷின் மாரி..சூர்யாவின் NGK..என நடித்தார். இரண்டும் வெற்றி பெறாத நிலையில் மீண்டும் மலையாளம் தெலுங்கு என நடித்துக் கொண்டிருக்கின்றார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் நாக சவுரியா சாய் பல்லவி நடிகர்கள் இயக்குனர்களுக்கு சரியான முறையில் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் ஓவர் பந்தா செய்வதாகவும் கூறினார். இதற்கு நடிகர் நாணி யும் ஆம் சாய் பல்லவி நடிகர்களை மதிப்பதில்லை என கூறி இருந்தார். இது பற்றி சாய் பல்லவி கூறுகையில் நடிக்க தான் சென்று இருக்கிறேன்.
எனக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தை சரியாக நடிக்கிறேன். இதை விட நடிகர்களுடன் வெளியே செல்ல பார்ட்டி போட எனக்கு விருப்பம் இல்லை. வேலைக்கு சென்று வீடு திரும்புவது போல் செயற்படுகிறேன். இது தவறு என்கிறார்கள்.. எனக்கு சிறு வயதில் இருந்தே பெற்றோர் சொல்லிக் கொடுத்தது எது நடந்தாலும் நன்மைக்கு என்று நினை என்பார்கள்..
அதனால் என்னை பற்றி எது கூறினாலும் நன்மைக்கு என்று நினைக்கிறேன். சிறுவயதில் பலமுறை தோற்று போயுள்ளேன் அப்போதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்கும் பழக்கம் என்னை காப்பாற்றியது இனியும் என்னை காப்பாற்றும் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்..!