ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கடுமையான வலி இது, குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி சமந்தா வெளியிட்ட வீடியோ.! சமந்தா சொல்வது உண்மை தான்.!!
சமந்தா நாக சைதன்யா பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் சமந்தா மீதான நாக சைதன்யாவின் பொறாமையே முக்கிய காரணம் என கூறப்படுகின்றது. திருமணமாகி 4 வருடம் ஆன போதும் சமந்தாவிற்கு திரைப்பட வாய்ப்புகள் குறையவில்லை, அது மட்டும் இன்றி முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.
இதில் சில திரைப்படங்களில் சமந்தா நடிப்பதற்கும் நாக சைதன்யா தடை விதித்திருந்தார். அது மட்டும் இன்றி சமந்தாவை சில வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி குழந்தை பெற்றுக் கொள்ளும் படி கூறி இருந்தார். இதற்கு மறுப்பு தெரிவிக்காத சமந்தா சில வருடங்கள் சினிமாவில் இருந்து விலகுவதாக தனது இணைய தளத்தில் அறிவித்திருந்தார். இருப்பினும் பிரச்சனை முடியாததால் பிரிந்தனர்.
தற்போது அதிக திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் சமந்தா அண்மையில் கொடுத்த பேட்டியில் குடும்பத்திற்காக பெண்கள் தாங்கும் வலிகளில் மிக கடுமையான வலி குழந்தை பெற்றுக் கொள்வது தான். வலிக்கும் என தெரிந்தும் ஒவ்வொரு பெண்ணும் விரும்பியே குழந்தை பெற்றுக் கொள்கின்றனர், ஆனால் பெண்கள் படும் கஷ்டம் பலருக்கு புரிவதில்லை, உலகில் உள்ள வலிகளில் மிக கடுமையான வலி என்றால் அது பெண்களின் பிரசவ வலி தான்.
குழந்தை பெற்றுக் கொள்வது அத்தனை சுலபமானது அல்ல, அதை தெரிந்தே ஒரு பெண் ஏற்றுக் கொள்கிறாள் என்றால் அவள் எத்தனை உயர்வானவள் என தெரிவித்துள்ளார். தற்போது சமந்தாவின் பேச்சு வைரலாகி வருகின்றது.!/