இன்றைய ராசி பலன் – 31.01.2022
இன்றைய பஞ்சாங்கம், 31-01-2022, தை 18, திங்கட்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 02.18 வரை பின்பு அமாவாசை. உத்திராடம் நட்சத்திரம் இரவு 09.57 வரை பின்பு திருவோணம். மரணயோகம் இரவு 09.57 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. தை அமாவாசை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடுவீர்கள்.கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
ரிஷப ராசி அன்பர்களே:கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் மற்ற வர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
மிதுன ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும்.சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள்.
கடக ராசி நேயர்களே:கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். காரியங் களில் அனுகூலம் உண்டாகும்.திருமண பேச்சுவார்த்தைகளில் அனுகூலப் பலன் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் விருப்பங்கள் யாவும் பூர்த்தியாகும்.எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். எதிரிகளின் சூழ்ச்சிகளை எளிதில் முறியடிப் பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.பிள்ளைகளின் விருப்பங்கள் யாவும் பூர்த்தியாகும்.
கன்னி ராசி காரர்களே:உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும்.தாயின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும்.குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
துலாராசி உறவுகளே:வரவை விட செலவுகள் அதிகமாகும். தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தவும்.பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். புதிய முயற்சிகளில் நன்கு சிந்தித்து ஈடுபடவும்.பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.
விருச்சிக ராசி நேயர்களே:உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உறவினர்களால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.
தனுசு ராசி அன்பர்களே:சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். நண்பர்கள் கேட்ட உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள்.அரசு அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.
மகர ராசி காரர்களே: அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும்.பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.உடன்பிறப்புகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். அவர்கள் கேட்டதை மகிழ்ச்சி யுடன் வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.
கும்ப ராசி உறவுகளே:நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.வாழ்க்கைத்துணை உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்.உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். அவர்களின் தேவைகளை நிறை வேற்றுவீர்கள்.வராத பழைய பாக்கிகள் வசூலாகும். செலவுகள் அதிகரிப்பதால் கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும்.
மீன ராசி நேயர்களே
பெற்றோருடன் மனம் விட்டு பேசுவீர்கள். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சகோதரர் கேட்கும் உதவி யை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக் கும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.