அழகிய பெண் குழந்தைக்கு அம்மாவான “வாரணம் ஆயிரம்” நாயகி சமீரா. இதோ புகைப்படம்..!!
வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக தோன்றியவர் சமீரா ரெட்டி. ஹிந்தி, தமிழ், என தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர் திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். ஏற்கனவே ஆண் குழந்தைக்கு தாயான சமீரா ரெட்டி கர்ப்பமாக இருந்தார்.
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் அவதானமாக இருப்பார்கள், ஆனால் சமீரா ரெட்டி கர்ப்பமாக இருக்கும் போது தான் தான் அதிக போட்டோ சூட் மற்றும் வீடியோ வெளியிட்டார். சாதாரணமாக இல்லாமல் தண்ணீருக்கடியில் அவர் செய்த போட்டோ சூட் ரசிகர்களை வியக்க வைத்தது.
காரணம் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் போது நீருக்கடியில் மூச்சுப் பிடித்து புகைப்பட சூட் செய்திருந்தார்.கர்ப்ப காலத்தில் அவர் வெளியிட்ட அத்தனை புகைப்படங்களும் வைரலாகியது. இந்த நிலையில் இன்று அழகான பெண் குழந்தைக்கு சமூரெ ரெட்டி தாயாகி உள்ளார்.
ஏற்கனவே ஆண் குழந்தை இருப்பதால் பெண் குழந்தை கிடைக்க வேண்டும் என பிராத்தனை செய்ததாகவும் தன்னுடைய மகனுக்கும் தங்கை வேண்டும் என கூறியதாகவும் கூறிய சமீரா ரெட்டி கடவுள் எங்கள் பிராத்தனையை நிறைவேற்றி பெண் குழந்தை கொடுத்துள்ளான் என கூறியுள்ளார்..!!