சனம் செட்டியுடன் படுக்கையை பகிர்ந்துகொண்ட பிக் பாஸ் தர்சன்..! வைரலாகும் புகைப்படங்கள்..!
கடந்த வாரம் முழுவதும் இணையத்தில் வைரலாகும் விடயம் பிக் பாஸ் போட்டியாளர்கள் தர்சன் சனம் செட்டியை காதலித்து பின் அவர்களின் பெற்றோரிடம் சம்மதம் கேட்டு பின் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதும் தற்போது வேண்டாம் என விலகுவதும் தான்.
எந்த ஒரு சினிமா தொடர்பும் இல்லாத தர்சன் மோடலிங் செய்து, அதன் பின் இந்தியா சென்ற போது பணம் தொடங்கி உணவு வரை கொடுத்து பார்த்துக் கொண்டவர் சனம் செட்டி. இதன் போது இருவருக்கும் இடையில் காதல் மலர 200 பிரபலங்கள் மத்தியில் முறைப்படி நிச்சயதார்த்தமும் இடம்பெற்றது.
ஆனால் மீடியாக்களுக்கு சொல்ல வேண்டாம் என தடுத்த தர்சன் பிக் பாஸ் வீட்டில் செரினுடன் ஏற்பட்ட உறவால் வெளியே வந்ததும் சனம் செட்டியை ஒதுக்க ஆரம்பித்தார். இதன் பின் திருமணம் செய்ய முடியாது என மறுத்ததால் கோபமடைந்த சனம் பொலீஸில் புகார் கொடுத்ததோடு பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
அதில் நிச்சயதார்த்தம் முடிந்ததன் பின் இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார். என்னிடம் இருந்து தர்சன் அனைத்தையும் எடுத்துக் கொண்டு தான் ஏமாற்றினார். என கண்ணீருடன் தெரிவித்தார்..!!