காதலனான டாக்டருடன் சேர்ந்து போதை பொருள் பாவனை..!சிக்கிய தமிழ் திரைப்பட நடிகையிடம் விசாரணை..!
கடந்த சில நாட்களாக திரைதுறையை சார்ந்த பலர் அதிரடியாக கைது செய்யப் பட்டுக் கொண்டிருக்கின்றனர், குறிபாக கன்னடா, தெலுங்கு, ஹிந்தி திரைப்பட நடிகை நடிகைகள் கைது செய்யப் படுகின்றனர். இதற்கான காரணம், போதை பொருள் கடத்தல், முறையற்ற விதத்தில் பொருட்கள் சேர்ப்பது, மோசமான போதை பொருள் பாவனை என பல வழக்குகள் பதிவாகிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் நேற்றைக்கு முந்தினம் நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி கைது செய்யப் பட்டார். பெங்களூர் இந்திரா நகரில் உள்ள சஞ்சனாவின் வீட்டில் இருந்த BMW கார் சஞ்சனாவின் பணத்தை வாங்கவில்லை என போலீஸ் விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சஞ்சனா கல்ராணியிடம் நடத்திய விஷாரணையில்..
குறித்த காரை தனது காதலரான டாக்டர் ஆஷிஸ் என்பவர் பரிசாக தந்ததாக கூறியுள்ளார். அதே போல் ஏற்கனவே கைது செய்யப் பட்ட ராகிணி நிவேதியும் சஞ்சனாவும் மடிவாளா மகளீர் கைதிகள் காப்பகத்தில் உள்ளனர். இவர்களை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப் பட்ட சஞ்சனா பொலீஸார் தன்னை கைது செய்வார்கள் என்பதை அறிந்து இருந்ததால் இது பற்றி அனைவரிடமும் கூறியதுடன் போதையில் வம்பிழுத்து கஷ்ட படுத்திய அயலவரிடம் கைது செய்யப் படுவதற்கு முதல் நாளே மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிட தக்கது..!!