செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ கார்த்திக், காரணம் இது தானா.? சோகத்தில் சீரியல் ரசிகர்கள்..!!
சீரியல்களில் ரசிகர்களின் அதிக ஆதரவை பெற்ற சீரியல் என்றால் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் “செம்பருத்தி” சீரியல் தான். 90ஸ் நாயகி ப்ரியா ராமன் நீண்ட நாட்களின் பின் முன்னணி கதாபாத்திரத்தில் இந்த சீரியலில் நடித்து வருகிறார், இவருடன் சபானா, கார்த்திக், கதிர் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வந்தனர்.
இதில் கடந்த வாரம் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் கதிரின் மனைவியாக நடித்து வந்த ஜனனி தொலைகாட்சியால் சீரியலில் இருந்து நீக்கப் பட்டார். ஏன் நீக்கப் பட்டார் என்பது ஜனனிக்கே தெரியாமல் இருப்பதாக ஜனனி கூறி இருந்தார். அடுத்து சீரியலில் இருந்து ஹீரோவான கார்த்திக் நீக்கப் படலாம் என ஜனனி கூறி இருந்தார்.
அதற்கான காரணமாக ஜனனி கூறியது கார்திக்கிற்கு சீரியலில் நடித்துக் கொண்டிருக்க விருப்பம் இல்லை, நல்ல திரைப்படங்கள் கிடைத்தால் சீரியலை விட்டு விலகி விடுவேன் என்று கூறிக்கொண்டே இருப்பார், அதனால் கார்த்திக் சீரியலை விட்டு சீக்கிரமே விலகலாம் என கூறினார்.
அதே போல் தற்போது ஆதித்தியா என்ற கதாபாத்திரத்தில் செம்பருத்தி சீரியலில் நடித்து வந்த கார்த்திக் சொந்த விருப்பத்தின் பேரில் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கார்த்திக் விலகுவதற்கான காரணம் திரைப்பட வாய்ப்பு கிடைத்ததா அல்லது வேறு ஏதுமா என்பது இது வரை தெரியவில்லை..!