முதல் சர்வதேச கிரிக்கெட் பயணத்திலேயே வெற்றி கண்ட தமிழக வீரர் நடராஜன்.! எங்கள் வாழ்த்துக்கள்..!!
இன்று இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இடபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் தொடரில் இந்திய அணி ஆறுதல் வெற்றியடைந்தது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்து முன்னணியில் இருந்த ஆஸ்திரேலிய அணி இன்று தோல்வியை தழுவிய போதும் தொடரை கைப்பற்றியது. இந்தியாவின் வெற்றிக்கு முதல் முதல் சர்வதேச களத்தில் பந்து வீச்சை ஆரம்பித்த தமிழக வீரர் நடராஜனும் ஒருவர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள், கிரிக்கெட் போட்டியில், நம் பாரத திருநாட்டிற்காக தன்னுடைய திறமையான பந்துவீச்சால் முதல் போட்டியில் இரண்டு விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார் நடராஜன்.
இவருக்கு மேலும் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை வெற்றியுடன் துவக்கி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு புரட்சி வானொலியின் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நடராஜனுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.!