பஞ்சாப் அணியின் வீரர் மொகமட் சமியின் காலை தொட்டு வணங்கிய CSK அணியின் வீரர் தீபக் சாஹர்.!! வைரலாகும் நெகிழ்ச்சியான புகைப்படம்.!!
பஞ்சாப் அணி வீரர் Mohammed shamiயின் காலை CSK அணி வீரர் தீபாக் சஹர் தொட்டு வணங்கிய நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று CSK பஞ்சாப் போட்டியின் போது இடம் பெற்றுள்ளது. கடந்த 16ம் திகதி இடம்பெற்ற இந்த போட்டியில் குறைந்த ஓட்டங்களுக்குள் பஞ்சாப்பை முடக்கியது சென்னை அணி.
இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தீபக் சஹர். 4 ஓவர்களில் 13 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து முக்கிய 4 விக்கட்டுகளை கைப்பற்றி அன்றைய ஆட்ட நாயகனாக தெரிவானார் தீபக் சஹர். இந்த வெற்றியானது CSK ஆதரவாளர்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருந்தது.
இந்த நிலையில் இந்த தொடர் ஆரம்பமாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மொகமட் சமியின் காலை தொட்டு தீபக் சஹர் வணங்கியுள்ளார். பொதுவாக எதையும் ஆரம்பிக்கும் முன்பு பெரியவர்களின் ஆசிர்வாதம் பெறுவது வழமை.
குறிப்பாக எமது நலன் விரும்பிகளிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வது மிகப் பெரிய மகிழ்ச்சியாகும். அந்த வகையில் தீபக்கின் நலன் விரும்பியான சாமியின் காலை தொட்டு தீபக் வணங்கியுள்ளார்.!!
Caption this ?#IPL2021 #PBKSvCSK #CSK #PBKS pic.twitter.com/zVW1TgEcAW
— Cricbuzz (@cricbuzz) April 17, 2021