நிர்வாணமாக வீடியோ அழைப்பு பேசிய காதலியை நம்பி 24 வயது இளைஞர் செய்த செயல்.!! அப்பாவி இளைஞரின் உயிரை பறித்த பேஸ்புக் காதல்.!!
இந்தியாவில் நிர்வாண வீடியோக்களை வைத்து காதலி மிரட்டியதால் 24 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான அவினாசுக்கு, முகநூலில் நேகா சர்மா என்ற பெண் நட்பாகி உள்ளார். ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பேஸ்புக்கில் மட்டும் சாட் செய்து வந்துள்ளனர்.
பின்னர் இருவரும் தங்கள் மொபைல் நம்பரை கொடுத்து பேச ஆரம்பித்துள்ளனர். நட்பு காதலாகி காதல் காமமாகி உள்ளது. அவினாஷ் நேகாவை நிஜமாக காதலித்த நிலையில் இருவரும் தொலைபேசியில் வாழ ஆரம்பித்துள்ளனர். இருவரும் வீடியோ கால் மூலம் நிர்வாணமாக பேச ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அவினாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலைகான காரணம் தெரியாமல் பொலீஸார் விழிந்த நிலையில் அவினாஷின் சகோதரர் தம்பியின் தற்கொலையில் எண் ஒருவரின் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இடம்பெற்ற விசாரணையில் தொலைபேசி இலக்கத்தை வைத்து இளைஞர் ஒருவரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞரிடம் நடத்தப் பட்ட விசாரணையில் நேகா அவினாஷை காதலிப்பது போல் நடித்ததாகவும், இதனை நம்பி அவினாஷ் வீடியோ காலில் நிர்வாணமாக பேசிய நிலையில் அவினாஷின் வீடியோவை ரெகோர்ட் செய்த நேகா அதனை காட்டி பணம் கேட்டு மிரட்டியதாகவும், இது வரை 21 ஆயிரம் ரூபா கொடுத்த அவினாஷ் வீடியோக்களை அழிக்கும் படி நேகாவிடம் கூறியுள்ளார்.
ஆனால் நேகா இன்னும் 30 ஆயிரம் தந்தால் அழித்துவிடுவதாக கூறியுள்ளார்.கல்லூரி முடித்து வேலைக்கு முயற்சி செய்யும் அவினாஷிடம் பணம் இல்லாததால் தற்கொலை செய்துகொண்டதாக குறித்த இளைஞர் கூறி உள்ளார். பேங் கணக்கில் போட்டால் பிரச்சனை வரும் என்பதால் நேகா எங்களுக்கு இடம் ஒன்றை சொல்லுவார் நாம் அங்கு சென்று பணத்தை வாங்குவோம்.
முதல் முறை 10 ஆயிரமும் இரண்டாவது முறை 11 ஆயிரம் ரூபாவும் வாங்கியதாக குறித்த இளைஞர் கூறியுள்ளார். அத்துடன் நேகா குறித்த இளைஞரின் பெயரில் சிம் வாங்கி இருந்த நிலையில் தற்போது தலைமறைவாகி உள்ளார்.!!