விவேக்கின் கனவை நிறைவேற்ற 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப் போகிறேன், பிரபல நடிகர் அதிரடி குவியும் வாழ்த்துக்கள்.!!
சின்ன கலைவாணர் என கொண்டாடப் பட்ட விவேக்கின் மரணத்தின் பின் பல பிரபலங்கள் அவர் விட்டுச் சென்ற ஒரு கோடி மரக் கன்றுகள் நடும் வேலைத் திட்டத்தை முன்னெடுக்கப் போவதாக கூறி வருகின்றனர். நேற்றைய தினம் எந்த ஒரு நடிகர் இறந்த போதும் செய்யாத செயலான மரக் கன்று நடும் செயலை ஏராளமானவர்கள் செய்தார்கள்.
விவேக்கின் ஆன்மா சாந்திக்கு நேற்றைய தினம் ரசிகர்கள் நட்ட மரக்கன்றுகளே போதுமானது. இருப்பினும் அவரது கனவு நிறைவேற வேண்டுமானால் ஒரு கோடி மரக்கன்றுகள் நட வேண்டும். அஜித், மற்றும் விவேக் ரசிகர்கள் ஏற்கனவே மரக்கன்றுகள் நடும் பணியை ஆரம்பித்துள்ள நிலையில் நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப் போவதாக அறிவித்துள்ளார்.
விவேக் ஏற்கனவே 30 லட்சத்திற்கு மேல் மரக்கன்றுகள் நட்டுள்ள நிலையில் அனைவரும் விவேக்கின் கனவை நிறைவேற்ற முன்வந்துள்ளமை பாராட்டுக்குறியது..!