சேரனை ஒதுக்கும் போட்டியாளர்கள். மனமுடைந்து ஒதுங்கிப் போன சேரன்..!!
இன்றைய பிக் பாஸ் ப்ரோமோவும் சண்டையில் தான் உள்ளது. பலரும் சேரனை ஓரங்கட்ட முயற்சி செய்து வருகின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் ரேஷ்மா நீ தான்டா இந்த ஊரிலேயே முட்டாள் என வாடா போடா என திட்டுகிறார். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
பிக் பாஸ் வீட்டிற்குள் மீரா, கவின், சாண்டி மூவருக்கும் சேரனை பிடிக்காது. ஏற்கனவே கவினுக்கு அறிவுரை வழங்கிய சேரனை சாண்டி என்ன கவின் சாத்தான் வேதம் ஓதுதா என கேட்பார். அதே போல் நேற்றும் சேரனை மட்டம்தட்டி பேசியதோடு மதுமிதாவையும் குள்ள தவளை என கலாய்த்தார்.
மீரா வெளிப்படையாகவே எனக்கு சேரனை பிடிக்காது என கூறி இருந்தார் இந்த டாஸ்க் ஆரம்பமானதில் இருந்து சேரனுடன் தகராறு செய்த படியே இருக்கிறார். இன்றும் உங்கள் தீர்ப்பு நியாயமானது அல்ல என்கிறார். அதற்கு லொஸ்லியா, மற்றும் மது சில விடயங்களை கூற ரேஷ்மாவும் சண்டைக்கு வருகிறார்.
இதனால் வெறுப்படையும் சேரம் கையெடுத்து கும்பிட்டு விட்டு நான் வேற மாதிரியான ஆள் என்னை விட்டுவிடுங்கள் என கூறி செல்கிறார் இன்று வீட்டிற்குள் சம்பவங்கள் இருக்கு.!!