24ம் திகதியுடன் நிறைவுக்கு வரும் 2 சீரியல்கள்.! என்ன என்ன சீரியல் தெரியுமா இதோ!!
ஒரே நேரத்தில் இரண்டு பிரபல சீரியல்கள் நிறைவுக்கு வர உள்ளது, இதனை பிரபல தொலைக்காட்சியே அறிவித்துள்ளது, மக்கள் திரைப்படங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அந்த அளவிற்கு சீரியல்களுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் குடும்ப பெண்கள் பொழுதுபோக்குக்காக சீரியல் பார்த்தனர் ஆனால் இப்போது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சீரியலுக்கு அடிமையாகிவிட்டனர். குறிப்பாக இளைஞர் யுவதிகள் கூட தற்போது சீரியல்களில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.
அப்படி இளைஞர், யுவதிகளை கவர்ந்த சீரியல்களில் ஒன்று சத்யா, அமுல் பேபி, ரவுடி பேபி என ரசிகர்கள் கொண்டாடினார்கள், இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வர இருக்கிறதாம், இந்த சீரியலுடன் ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி சீரியலும் முடியப் போகிறதாம்.
இது குறித்து தொலைக்காட்சி நிர்வாகம் “சில தவிர்க்க முடியாத காரணத்தால் சத்யா மற்றும் ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி சீரியல்கள் நிறைவடையப் போகிறது” இதன் இறுதி எபிசோட் 23ம் 24ம் திகதிகளில் ஒளிபரப்பாகும் என தெரிவித்துள்ளது. !