இம்முறை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர் இவர் தானாம்..! வெளியான தகவல்..
பிக் பாஸ் யுத்தம் ஆரம்பமாகி 86 நாட்களை கடந்துவிட்டது. இது வரை மந்த நிலையில் இருந்த போட்டியாளர்கள் தற்போது சக்திமான், ஸ்பைடர் மேன், என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். எது எப்படி போனாலும் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறியே தீர வேண்டும் என்பது பிக் பாஸ் விதிமுறை.
அப்படி வெளியேறினால் மட்டுமே நிகழ்ச்சியை 106 நாளில் முடிக்க முடியும். இந்த வார நாமினேஷனில் சேரன்,செரின், கவின், லொஸ்லியா இருக்கின்றனர். இதில் பலர் சேரன் வெளியேற்றப் படுவார் என எதிர்பார்க்கப் பட்டது ஆனால் தற்போது வரை வாக்குகளை பார்க்கையில் சேரனின் வாக்குகள் கவினுடன் போட்டி போட்டு வருகிறது.
பிக் பாஸ் வீட்டை பொறுத்த வரை கவின் லொஸ்லியா காதல் தான் கண்டெண்ட் ஆக இருந்தது. தற்போதும் அது தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஞாயிற்றுக் கிழமை யார் வெளியேறுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதில் சேரன் கவின் காப்பாற்றப் படுவார்கள் என்பது உறுதியாகி உள்ளது. செரின் மற்றும் லொஸ்லியா இருவருக்குமிடையில் போட்டி இருக்கும் அதில் செரின் இம்முறை வீட்டை விட்டு வெளியேறுகிறாராம். சிறிதளவான வாக்குகள் வித்தியாசத்தில் லொஸ்லியா வெற்றிபெற்றுள்ளதாக தெரிய வருகிறது. பொறுத்து இருந்து பார்க்கலாம்..!!