நடிகர் சுஷாந்த் சிங் மரணமடைந்து சரியாக 30 நாளில் அவரது இரண்டு காதலிகளும் செய்த செயல்.! வைரலாகும் புகைப்படங்கள்..!!
அண்மையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவர் நடிகர் சுஷாந்த் சிங். தல தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான இவர் இன்றில் இருந்து 30 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் கூறி வருகின்ற போதும் இன்னும் யாருக்கும் உண்மை தெரியாது.
இந்த நிலையில் சுஷாந்த் மரணமடைந்து சுமார் 30 நாட்கள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் சுஷாந்தின் முன்னாள் காதலி அங்கிதா பதிவொன்றை இட்டுள்ளார். இதில் இனி நீ கடவுள் குழந்தை என கூறி விளக்கு ஏற்றி இறைவழி பாடு போல் உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் உங்களை பிரிந்து சென்று வேறு பெண்ணை காதலிப்பவருக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனை சிறந்தது.
உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி என கூறியுள்ளனர். இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு காரணம் என கூறப் படும் ரியா பதிவொன்றை இட்டுள்ளார். அதில் இன்றுடன் நீ பிரிந்து 30 நாட்கள் கடந்து விட்டது, உன் பிரிவு மிகவும் வேதனை தான் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நீ அங்கு மகிழ்ச்சியாக இரு என குறிப்பிட்டுள்ளார்.
சுஷாந்த் சிங்குடன் இருந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சுஷாந்த் சிங்கை கொலை செய்ததே நீ தான் ஏன் இப்போது நடிக்கிறாய், உன்னால் தான் அவர் இறந்தார் என திட்டி தீர்த்து வருகின்றனர்..!!