சிங்கப்பூரின் முன்னாள் மலாய் அரண்மனை கற்றல் தளமாக உருமாற்றம்…!!!
சிங்கப்பூரில் கம்போங் கிளாம் பகுதியிலுள்ள முன்னாள் மலாய் அரண்மனை இனி கற்றலுக்கான இடமாக உருமாற்றம் கண்டுள்ளது. இது Amazing Chambers Singapura என அது அழைக்கப்படுகிறது.
இரு-வழி தொடர்பு மூலம், கற்றலுக்கு உதவும் வகையிலான அறைகள் அதில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி சிங்கப்பூரின் வரலாற்றை 800 வருங்களுக்கு முன் பின்னோக்கி பார்க்க வைக்கிறது.
சுல்தான் கேட்டில் அமைந்துள்ள அந்த பகுதியை, மலாய் மரபுடைமை அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இதுக்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் வரை, அதில், மமாண்டா எனும் மலாய் உணவகம் செயல்பட்டு வந்ததுள்ளது. வர்த்தக மேம்பட்டுத் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் கம்போங் கேலாமும் நகரச் சீரமைப்பு ஆணையத்தின் யோசனையில், அந்தத் திட்டம் உருவாகியுள்ளது.