மர்ம மரணத்தின் பின் கால் அடையாளத்தை வைத்து பெற்றோரை காப்பாற்றிய பாடகி சித்ராவின் மகள்..! இது தான் தெய்வத்தின் விளையாட்டு..!
பாடகி சித்ரா தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமா துறையே தூக்கி வைத்து கொண்டாடும் பிரபல பாடகி. இவரது பாடல்களை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. சின்னக்குயில் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப் படுகின்ற சித்ராவின் வாழ்க்கை சோகமானது என்பது நாம் அறிந்ததே.. திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லை. ஏகப்பட்ட சிகிச்சைகள் பயன் இல்லை.
இருப்பினும் இறைவனிடம் வேண்டினார், சாய் பாபாவின் அருளால் பெண் குழந்தை கிடைத்தது.. ஆனால் சித்ராவிற்கு கடவுளுக்குமான உறவு குறைந்துவிட கூடாது என்பதால் குறை உள்ள குழந்தையை முழுமையாக சித்ராவிற்கு கொடுக்கப் பட்டது. அவரது உலகமே குழந்தை என்றானது. இந்த நிலையில் துபாய் சென்ற சித்ரா குடும்பத்தினர் குழந்தையை விளையாட விட்டுள்ளனர்.
வழமை போல் மஞ்சரி ஆல்ப பாடல்களை பார்த்துக் கொண்டிருந்தாள் குழந்தை நந்தனா. சிறிது நேரத்தில் அந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது. பாடல் பார்த்துக் கொண்டிருந்தவள் குளியல் தடாகத்தில் வீழ்ந்து மரணமடைந்தாள். இது எப்படி நடந்தது என்பது இன்று வரை மர்மம் என்கிறார் சித்ரா. வழமையாக மகள் காலில் செருப்பு இல்லாமல் நடக்க மாட்டாள் ஆனால் அன்று செருப்பு அணியவில்லை.
அவளது பொம்மை இல்லாமல் சாப்பிடவோ தூங்கவோ விளையாடவோ மாட்டாள் ஆனால் பொம்மை டிவி பார்க்கும் இடத்தில் இருந்தது. வீட்டை விட்டு வெளியே வர இரும்பு கதவை திறக்க வேண்டும் ஆனால் வெறும் 5 வயது நிரம்பாத அவளால் முடியாது ஆனால் திறந்து சென்று இருக்கிறாள். இத்தனை மர்மங்களுடன் இன்னுமொன்றும் நடந்தது. அது என் மகளின் கால் அடையாளங்கள் தண்ணீர் தடாகம் வரை இருந்தது.
அந்த அடையாளம் பொலீஸார் வரும் வரை மறையவில்லை. இவற்றை பொலீஸார் குறித்துக் கொண்டு சென்றனர். துபாய் சட்டத்தின் படி குழந்தை மரணத்தின் பின் நாம் கைது செய்யப் பட்டிருப்போம். ஆனால் குழந்தையின் கால் அடையாளம் அவள் தனியாக சென்றதை உணர்த்தியுள்ளது அதனால் நாம் கைது செய்யப் படவில்லை. மர்ம மரணத்திலும் அவல் எங்களை காப்பாற்றினாள் என கதறியுள்ளார்..!!