பிக் பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சி செய்ததற்காக வெளியேற்றப் பட்டவர் நடிகை மதுமிதா. இது வரை தனக்கு உண்மையில் என்ன நடந்தது என தெரிவிக்காத மதுமிதா இன்று தனக்கு நடந்த அவமானம் பற்றி மீடியாக்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
வெளியேற்றத்திற்கான காரணம் பற்றி மதுமிதா குறிப்பிடும் போது: ஹெல்லோ ஆப்ஸ் டாஸ்க் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்த ஒரு வரி கவிதையை தங்கள் குரலில் பதிவு செய்து தரவேண்டும் என குறிப்பிட்டனர்.
இதனை வாட்சப் ஸ்டேட்ஸாக பயன்படுத்துவார்கள் எனவும் கூறப்பட்டது. அதன் போது நான் வெளியே வந்தேன் வெயில் நெருப்பாக இருந்தது அதை வைத்தே கவிதை கூறினேன். அதாவது ” வருண பகவானும் கர்நாடகா காரர் போல..தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கிறார்” இப்படி கூறினேன்.
இவ்வளவு தான் நடந்தது.இதை பெரிதாக்கிய செரின் ட்ராமா போட்டார். இதனால் பிக் பாஸ் குரல் வீட்டில் அரசியல் பேசக் கூடாது என எச்சரித்தது. இதனை கேட்ட அனைவரும் என்னை பார்த்து சிரித்தனர். எனக்கு அவமானமாக இருந்தது இதனால் கையை அறுத்துக் கொண்டேன்.
அதன் பின் சேரன் மட்டும் கஸ்தூரி மட்டுமே எனக்கு உதவினார்கள். அதன் பின் வெளியே வந்துவிட்டேன். ஆனால் நான் வந்த பின் என் பிரிவு பற்றி யாரும் பேசவில்லை. அது பற்றி கவலையும் படவில்லை.. அது தான் எனக்கு இன்னும் புரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்..!