அனைவர் முன்னிலையிலும் கண்ணீர் விட்டு அழுத குக் வித் கோமாளி சிவாங்கி..! காரணம் இது தானாம்…!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி நேற்றைய தினம் நிறைவடைந்து. இதில் வனிதா விஜயகுமார் வெற்றியாளராக அறிவிக்கப் பட்டார். இறுதி சுற்றில் வனிதா விஜயகுமார், நடிகை ரேகா, உமா ரியாஸ், ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் கொடுக்கப் பட்ட 4 டாஸ்களில் 3 ல் வெற்றிபெற்ற வனிதா முதலிடம் பெற்றதுடன் உமா ரியாஸ் இரண்டாம் இடம் பெற்றார், மூன்றாம் இடத்தை ரம்யா பாண்டியன் பெற்றுக் கொண்டார். இதில் வெற்றிபெற்ற வனிதா தன்னுடன் கோமாளியாக இருந்த சிவாங்கி மற்றும் பாலாவிற்கு நன்றி சொன்னார்.
அதன் போது பேசிய சிவாங்கி கண் கலங்கியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது சிவாங்கி பேசுவதை அனைவரும் கிண்டல் செய்ததாகவும் சிவாங்கி வேண்டும் என்று அப்படி பேசுவதாக கூறி பலர் தன்னை ஒதுக்கியதாகவும் கூறினார்.
சிவாங்கியின் குரல் பேசும் போது ஒரு விதமாகவும், பேசும் போது அப்படியே மாறி விடுவதுமே இதற்கு காரணமாக இருந்தது. ஆனால் சிவாங்கியின் குரல் இயற்கையாகவே அப்படியானது தான் என்பதை இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் எடுத்து சென்று விட்டதாக கூறிய சிவாங்கிக்கு சிம்ம குரல் சிங்காரி என்ற விருதும் கிடைத்தது..! சிவாங்கி பேசும் போது கண்ணீர் விட்டு அழுதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது…!!