எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை “சார்பட்டா பரம்பரை”திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளார் பா. ரஞ்சித்.! பிரபல விஜே பரபரப்பு குற்றச்சாட்டு.!!
பா. ரஞ்சித் அவர்கள் ஏன் இப்படி செய்தார்கள், திரைப்படத்தில் நடிப்பதற்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா, பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபரை திரைப்படத்தில் நடிப்பதற்கு எடுத்துள்ளாரே என பிரபல விஜேயான நடிகர் பார்கவின் மனைவி ஸ்ரீரஞ்சனி போட்ட பதிவு வைரலாகி வருகின்றது.
பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை, ஆர்யா உட்பட பல நடிக நடிகைகள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் தற்போது பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. பா. ரஞ்சித்தின் இன்னுமொரு சிறந்த படைப்பு என கொண்டாடப் பட்டு வருகின்றது.
சார்பட்டா பரம்பரை, திரைப்படம் பற்றிய கருத்து ஒன்றை பகிர்ந்துள்ள விஜே ஸ்ரீரஞ்சனி திரைப்படம் சிறப்பாக இருந்த போதும் அதில் நடித்த ஜான் விஜய் ஒரு பெண் பித்தன். மீ 2 பிரச்சனையின் போது ஜான் விஜய் பற்றி தெரிவித்திருந்தேன், நிகழ்ச்சி முடித்து விட்டு வீட்டுக்கு சென்ற பின் நள்ளிரவில் கால் செய்து மிக மோசமாக பேசுவார்.
அத்துடன் படுக்கையை பகிர சொல்லி தொல்லை கொடுத்திருந்தார். நிகழ்ச்சியின் போது தொட்டு தொட்டு பேசுவது ஜான் விஜயின் கேவலமான செயல்களில் ஒன்று, அப்படியானவரை திரைப்படம் நடிக்க எடுத்திருப்பது அவமானம் எனமேலும் தெரிவித்துள்ளார், இந்த பதிவு வைரலாகி வருகின்றது.!!