திருமணமாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் சர்ச்சையில் சிக்கிய கவிஞர் சினேகன். வைரலாகி வரும் பதிவு.!!
திருமணமாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் சினேகன். 700 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய சினேகன் இதுவரை சுமார் 2500க்கு மேற்பட்ட பாடல்களை எழுதி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்ட சினேகன் டைட்டிலை வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் இரண்டாம் இடம் பிடித்தார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து இரண்டு முறை தேர்த்தலில் போட்டியிட்டு தோற்றார். இந்த நிலையில் கடந்த வாரம் சினேகனுக்கு திருமணம் என அறிவிக்கப் பட்டது, நடிகை கன்னிகாவை 8 வருடங்களாக சினேகன் காதலித்து வந்தது அதன் பின்னரே தெரியவந்தது, இருவரது திருமணமும் நேற்றைக்கு முன் தினம் கமலஹாசன் முன்னிலையில் இடம்பெற்றது.
இந்த திருமணத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். திருமணத்திற்கு வருபவர்களை சினேகன் கட்டிப்பிடி வைத்தியம் கொடுத்தே வரவேற்றார். இது பலரிடையே கடுப்பை ஏற்படுத்தியது, காரணம் எளிமையான திருமணம், கொரோனா திருமணம், அது இது என மக்களுக்கு கூறிவிட்டு அனைத்தையும் மீறி சினேகன் திருமணம் செய்ததாக நெட்டிசன்கள் திட்டி தீர்க்க ஆரம்பித்துள்ளனர். அத்துடன் சினேகனுக்கு எதிராக புகார் கொடுக்கவும் தயாராகி வருகின்றனர்!
எதுவுமே அறியாத எளிய மக்களிடம் dynamic திருமணம் என பொய் சொல்லி ஏமாற்றிய சினேகன். இபோது அவர் திருமணத்தையும் இதே போல செய்வாரா??? #Snehan #KannikaRavi@savukku@naatupurathan@krishnaskyblue@Surya_BornToWinhttps://t.co/GLA8tlW6Bg
— Hapi Serpent (@HapiSerpent) July 26, 2021