பிக் பாஸில் நண்பர்களாகவும் நிஜ வாழ்வில் காதலர்களாகவும் மாறப்போகும் ரம்யா சோம் சேகர் ஜோடி.!! வீட்டில் பச்சை கொடி காட்டியாச்சு.!! இதோ உறுதியான பதிவு.!!
காதல் இல்லாமலே பிக் பாஸ் வரலாற்றில் ஜோடி ஒன்று திருமணம் செய்யும் வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளராக இருந்து பின் ரசிகர்களால் விஷ பாட்டில் என வெறுக்கப் பட்டவர் நடிகை ரம்யா பாண்டியன். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து திறமையாக விளையாடி வந்த ரம்யா பாண்டியன் எதையும் வெளிப்படையாக பேசி வந்தார்.
ஆரி செய்யும் சின்ன சின்ன தவறுகளை வீட்டில் உள்ளவர்களுடன் கேலி கிண்டலாக ரம்யா பேசி வந்ததால் ரசிகர்கள் வெறுக்க ஆரம்பித்தனர். ஆரி ரசிகர்கள் ரம்யாவிற்கு நரி பாண்டியன், விஷம் பாட்டில் உட்பட பல பெயர்களை வைத்தது மட்டும் இன்றி மிக்ஸர் போட்டியாளர்களுக்கு வாக்களித்தார்கள். இதனால் ரம்யா பாண்டியன் வெளியேற்றப் படலாம் என அனைவரும் நினைத்திருந்தனர்.
எப்படியோ தப்பி விட்டார். இப்படியான நிலையில் தான் ரம்யாவின் தம்பி பரசு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். அதன் போது சோம் சேகரை மச்சான் என கூப்பிட்டார். ஏற்கனவே சோம் சேகருக்கு ரம்யா மீது ஒரு கண், அதாவது காதல். ஆனால் ரம்யா காதலில் சிக்கவில்லை. பரசு மச்சான் என கூப்பிட்டதால் மீண்டும் ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் சோம் மிகவும் நல்லவர் வல்லவர் என பரசு பாண்டியன் போஸ்ட் ஒன்றை பதிவிட்டார். அவ்வளவு தான் ரசிகர்கள் கேள்விக்கு மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் இருவரும் முடிவு எடுத்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல் பரசு பதில் அளித்துள்ளார். சோம் சேகர் ரம்யா பாண்டியன் திருமணம் நடக்குமா என்ற கேள்விக்கு அது அவர்கள் எடுக்கும் முடிவு என கூறியுள்ளார். இதனால் ரம்யா வீட்டில் பச்சைக் கொடி காட்டப் பட்டுள்ளது உறுதி படுத்தப் பட்டுள்ளது.!!
Enna maamey happy-ah?! #Som #Someh #somya#BiggBossTamil4 #BiggBossTamil4 #Ramya #RamyaPandian pic.twitter.com/7g3XHeaDxC
— Ravanan (@_raja) January 15, 2021