இன்றைய ராசி பலன் – 17.01.2021
இன்றைய பஞ்சாங்கம், 17-01-2021, தை 04, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி காலை 08.09 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி நாள் முழுவதும் பூரட்டாதி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
மேஷ ராசி நேயர்களே:
குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.வீட்டை அழகுபடுத்துவீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:
புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும்.வாகன வசதிப் பெருகும்.
மிதுன ராசி காரர்களே:
நண்பர்களின் சந்திப்பு நன்மையை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.தெய்வ வழிபாட்டில் ஆர்வம் உண்டாகும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விவாதம் செய்வதைத் தவிர்க்க வும்.எதிர்பாராத சந்திப்பு நிகழும்.
கடக ராசி நேயர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் பொறுமை மிக அவசியம்.சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள்.வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அலைச்சல் உண்டாகும். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:
பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சிலருக்கு வீட்டில் அதிகரிக்கும் பொறுப்புகளின் காரணமாக உடல் அசதி உண்டாகும் .பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். உறவினர் களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும்.கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும்.
கன்னி ராசி காரர்களே:
தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள்.சுபகாரிய முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வழக்க மான நிலையே காணப்படும்.
துலாராசி உறவுகளே:
முன்கோபத்தை தவிருங்கள்.பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிலருக்குக் குடும்பம் தொடர்பான வேலையை முன்னிட்டு சற்று அலைச்சல் ஏற்படலாம்.வீண் செலவுகளால் சேமிப்பு குறையும்.குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும்.திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிக ராசி நேயர்களே:
வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.மகளுக்கு நல்ல வரன் அமையும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.சுபகாரிய முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:
நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சிலருக்கு இளைய சகோதரர்கள் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இல்லத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மகர ராசி காரர்களே:
கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பேச்சினால் பிரச்னை வர வாய்ப்பு உள்ளதால் மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:
பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். செல்பேசி மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.எதிரிகள் மற்றும் பழைய கடன்கள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும்.
மீன ராசி நேயர்களே:
பிள்ளைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களால் காரிய அனுகூலம் ஏற்படும்.யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சகோதரர்களிடம் எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியா பாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.